Amudham 43

அமுதம் 43 பூங்கோதையின் சொல்லுக்கிணங்க உடனே ரிசார்ட் திறப்பு விழா வேலைகள் நடந்தது. அவளால் அலைய முடியாத காரணத்தால் அவள் வீட்டிலிருந்தே அனைத்தையும் மேற்பார்வை பார்த்தாள். அன்று காலை ஆதியும் நவியும் கோத்தகிரி போய் முகிலனைப் பார்த்து போதை கடத்தல் கும்பலுடன் அவன் எப்படி சேர்ந்தான் எனக் கேட்க, அவனோ நீளமாக கதையளந்தான். “வேண்டாததை பேசாதே டா. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.” “சுஜி கடத்தலுக்கு அப்பறம் நான் டிரக்ஃஸ் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்பறம் இங்க […]

Amudham 42

அமுதம் 42 ஜோதிலிங்கம் தாத்தா ஊட்டியை நெருங்கி விட்டதாக சொன்னதும், ஆதி எஸ்டேட்டில் இருந்து கிளம்பி வந்தான். தாத்தா நேராக வீட்டிற்கு வராமல் ஆதியை வேறு இடத்திற்கு வரச் சொன்னார். ஆதிக்கு மனதில் நெருடல் இருந்தாலும் தாத்தாவின் சொல்லுக்கிணங்க அவன் ஒரு இடத்தைச் சொல்லி வரச் சொன்னான். அவன் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் யுகம் போல இருக்க, தாத்தா போர்ஸ் ட்ரவெலர்ரில் இருந்து இறங்கவும் ஆதி குழப்பமானான்.‘ஒருவருக்கு எதற்கு வேன்?’ என்று. ஆனால் தாத்தா அவனை உள்ளே […]

Amudham 41

அமுதம் 41 ஆதி சக்தியின் வார்த்தைகளை கவனிக்கத் தவறினான். அவன் சற்று யோசித்திருந்தாலும் அவன் கண்டுகொண்டிருப்பான். சக்தியை கவனமாக இதே வீட்டில் வைத்திருக்கும் படி அந்த நிறுவன ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டு, பார்வதி பாட்டி, தமயந்தி, லட்சுமியை அழைத்து கொண்டு ஊட்டிக்கு விரைந்தான். அவனால் பூமாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூளை வேலை நிறுத்தம் செய்வது போல உணர்ந்தான். தாத்தாவின் பாதுகாப்பிற்கு நிறுவன ஆட்களையும், உதவிக்கு தனக்கு தெரிந்த சிலரையும் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஊட்டியை நோக்கி ஆவலாய் […]

Amudham 40

அமுதம் 40 சென்னையை நோக்கிய ஆதியின் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. அவன் யோசிக்க, செயல்படுத்த, அவ்வளவு விஷயங்கள் இருந்தது சென்னையில்! முகிலன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் சென்னையில் மட்டுமே இருந்தான். கோதைக்காக ஊட்டிக்கும் தலைமறைவாக கோவைக்கும் வந்திருக்கிறான். அதனால் கண்டிப்பாக மீண்டும் சென்னை தான் சென்றிருப்பான் என்பதில் ஆதிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனால் அங்கு அவனின் ஆட்கள் பலரை பல பகுதிகளுக்கு அனுப்பி தேடச் சொல்லிவிட்டு இவனும் சென்னை சென்று கொண்டிருந்தான். ஆதி சென்னை […]

Amudham 39

அமுதம் 39 பல முறை அழைத்தும் ஆதியின் அன்னை அன்னத்தின் எண் சுவிட்ச் ஆஃப் என்று வர, ஆதிக்கு பயம் பிடித்தது. வீட்டு இலக்கத்திற்கு அடிக்க அதுவும் வேலை செய்யவில்லை. என்ன முயன்றும் அவனால் கோவை வீட்டை தொடர்பு கொள்ள முடியாமல் போகவும், தானே நேரில் சென்று பார்த்தால் என்ன என்று நினைத்தான்.. அகிலனை அழைத்து நிலைமையை விளக்கியவன் “நான் வேலை விஷயமா போயிருக்கேன்னு சொல்லுங்க அண்ணா. நான் பார்த்துட்டு வந்துடறேன்.” என்றான். அகிலனுக்கு ஆதியை தனியாக […]

Amudham 38

அமுதம் 38 சுந்தருக்கு மனமெல்லாம் எரிந்தது. ‘அப்பா அப்பா’ என்று தன்னை சுற்றி சுற்றி வந்த பெண், இன்று தன்னை அந்நியன் போல ஒதுக்குவது அவருக்கு வலித்தது. குடும்பத்தில் ஒருவனே ஆனாலும் முகிலன் சொன்னதை நம்பியிருக்க கூடாது. என்ன செய்யலாம்? அன்று விதி அப்படி அமைந்துவிட்டது. இல்லையென்றால் தோழியாய் தாங்கும் மீனாட்சி கோதையை அப்படி நினைத்திருப்பாளா? இல்லை அவளே சொல்லியிருந்தாலும் நான் கேட்டிருப்பேனா? எல்லாம் தலையெழுத்து என்று நொந்து கொண்டவர், கோதை தன்னிடம் கேட்ட கேள்விகளை அசை […]

Amudham 37

அமுதம் 37 தன் சிப்பி இமைகளை மெல்ல மெல்லத் திறந்து தன் கருவிழியால் அந்த இடம் முழுவதும் அவள் பார்வையை ஓட்ட, ஏதோ மருத்துவமனை என்பது வரை புரிந்தது. தான் மயங்கும் முன் கண்ட தன் கணவனின் கண்ணீர் முகம் அவள் மனதில் கலக்கம் தர, ஆதியை பார்க்க வேண்டும் என்று எழுந்த ஆவலால் அவள் தன்னிலை உணராது எழுந்துகொள்ள முனைய அவளால் அது முடியாமல் போனது. அதிர்ந்த மனதை அடக்கி, கண்ணை கீழ் நோக்கி தன் […]

Amudham 36

அமுதம் 36 கோதையின் வார்த்தைகளைக் கேட்ட சுந்தர் நொறுங்கிப் போனார். ஆதி நினைவிழந்த கோதையை பார்த்துக் கதறினான். அவளின் தோளிலிருந்தது வழியும் ரத்தத்தை நிறுத்த, தன் சட்டை கொண்டு இறுக்கிக் கட்டியவன் அவளை கைகளில் ஏந்தியபடி வாகனம் நோக்கி ஓட, அங்கே அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. கோதையை ஆம்புலன்ஸில் விட்டவன் மருத்துவர் அவளுக்கு சுவாசிக்க பிராண வாயுவைப் பொருத்தியபடி மருத்துவமனை நோக்கி விரைவாகச் செல்லச் சொன்னார். ஆதி ஆம்புலன்ஸில் ஏறப்போனவன், நினைவு வந்தவனாய் அவரை காத்திருக்க […]

ஆப்ரேஷன் சுபாஷ்

அந்த நண்பகல் வேளையில் அச்சிறு கிராமம் மிகுந்த அமைதியோடு காட்சியளித்தது. பெண்கள் ஆங்காங்கே வீட்டு வாயில்களிலும், புழக்கடையில் உள்ள திட்டுகளிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வாய் பேசிக்கொண்டிருந்ததாலும் கைகள் அரிசி புடைப்பது, பூ கட்டுவது என்று அமர்ந்தே செய்யும் பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்தது. ஆண்கள் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் விதமாக ஊரின் கூடம், வீட்டுத் திண்ணை என்று அவர்களும் கூடி அமர்ந்திருந்தாலும் கைகளில் செய்தித்தாள், வார இதழ் என்று ஏதோ ஒன்று இடம்பிடித்திருந்தது. ஊரின்அமைதியை […]

Amudham 35

அமுதம் 35 வானளாவிய மரங்களுக்கு இடையில் இருந்த அந்த சிறு கிராமம், யாருக்கும் அவ்வளவு எளிதில் புலப்படாது. அவ்வளவு அடர்த்தி.. நம் கால்தடங்கள் பதிவதே அரிதான இடம் என்று நினைத்தால், மரங்களின் கிளைகளால்,அதன் அசாத்திய வளர்ச்சியால் சூரியக் கதிர்களே அம்மண்ணை தொட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். அங்கே ஓர் இடத்தில், கோர முகத்துடன், பன்னிருகைகளில் பற்பல ஆயுதம் தரித்த வனபத்ரகாளியின் சிலை உயர்ந்து நின்றது. காண்பவரை ஒரு நொடி கதிகலங்கச் செய்திடும் அத்தாயின் ரௌத்திர முகம். நேற்று […]

error: Content is protected !!