Adhigara 3

அதிகாரம் 3 “ஷா லா லா ஷா லா லாரெட்டை வால் வெண்ணிலாஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்திஎன் தோழி சாமந்திவெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்திகொட்டும் அருவி வி விஎன்னை தழுவி வி விஅள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ ஷா லா லா ஷா லா லாரெட்டை வால் வெண்ணிலாஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா” ஹோம் தியேட்டர் 5.1 இல் பாடல் வீட்டையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. […]

Adhigara 2

அதிகாரம் 2 நீரூபன் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற பழனியைக் கண்டு, “தாத்தா சும்மா சும்மா எழுந்து நிற்காதீங்க. உட்காருங்க.” என்றவன் பின் யோசனையாக, “எல்லாரையும் சாப்பிட போக சொல்லிட்டேன். ஆனா இன்னும் எதையாவது பறிச்சுக்கிட்டு நின்னுட்டு இருப்பாங்க. நீங்க போய் அதட்டி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போங்க. நீங்களும் சாப்பிட்டு நிதானமா வாங்க என்ன?” என்று அவரது டேபிளின் இருபுறமும் கையூன்றி கூறினான் நீரூபன். அவனது குரலில் அத்தனை மென்மை. பழனியின் […]

அஞ்சுவண்ணப் பூவே! 7

அத்தியாயம் 7 அவனது கூற்றை முழுமையாகக் கேட்ட வழக்கறிஞர்கள் அவனிடம் மீண்டும் அதே கேள்வியையே முன் வைத்தனர். “சரி சார். நீங்க சொல்றபடி பார்த்தாலும், அவர் காட்டிய எல்லா டாகுமென்ட்டுமே நிஜமானது தான் சார். எப்படி ஆவணம் போலின்னு சொல்ல முடியும் சொல்லுங்க?” “சார் அது என் அப்பா கையெழுத்து தான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா அதுல எழுதப்பட்ட எதுவுமே உண்மையா இருக்க வாய்பில்ல சார்.” என்றான் அழுத்தமாக. “சார் அப்ப உங்களுக்கு வயசு ரொம்ப […]

Adhigara 1

அதிகாரம் 1 சென்னையின் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் தனது விலை உயர்ந்த காரில் வெயிலின் கசகசப்பு இல்லாமல் ஏசியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார் எம்.எல்.ஏ கோதண்டம். அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் சந்திரன் தன் தந்தையிடம் புலம்பியபடி வந்தான். “ஏன் பா இப்படி பண்றீங்க? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பா. உங்க பார்ட்டி ஆபிஸ் வந்து நான் என்ன பண்ண போறேன்? எனக்கு அங்க பார்ட்டி ரெடி பண்ணி வச்சு […]

Amudham 50

அமுதம் 50 அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அருணா தன் அருகிலே நின்ற கணவனின் கண்ணில் மகிழ்ச்சியையும் மீறி அவளின் வலியை உணர்ந்த புரிதலைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாள். அருணாவின் தாயும் வந்துவிட, அங்கே மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் போனது. குழந்தையைப் பார்க்க, கோதை ஆதியுடன் வந்திருந்தாள். தன் மேடிட ஆரம்பித்திருந்த வயிற்றின் மேல் குட்டி அகிலனை வைத்து கொஞ்சி,” பாப்பா சத்தம் கேக்குதா?” என்று கேட்க, குழந்தை பொக்கை வாய் தெரிய சிரித்தது. “அகி செல்லம்! குட்டி […]

Amudham 49

அமுதம் 49 “சரி கோதை நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடு”, என்று அனைவரும் நகர, புவி மட்டும் கண்ணில் கண்ணீரை தேக்கியபடி அவளை பார்க்க, ஆதி அவனை அருகில் அழைத்தான். ஆதியின் மடியில் இருந்து இறங்கியவள், அவனை நெருங்கி அவன் கைகளைப் பிடிக்க, “அக்கா” என்ற அவன் விசும்பலே அவன் தன்னை காணாது துடித்த துடிப்பைச் சொல்ல, “டேய் பொடிப்பையா. என்ன டா அழுகற?” “அக்கா. உன்னை காணோம்னு நான் ரொம்ப ரொம்ப” எனும் போதே […]

Amudham 48

அமுதம் 48 பிரவீன் அவன் கண்ணில் பட்ட சடலத்தைப் பார்த்து அலறிய அலறலில் அனைவருக்கும் குலைநடுங்கிப்போனது. அங்கே அவர்கள் கண்டது கோரமாய் ஏதோ ஒரு மிருகத்தால் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை தான். வனத்துறை ஆட்கள் அது பூங்கோதையா என்று பார்த்து கூறும்படி அழைக்க, அனைவரும் ஒரே குரலில் “இல்லை.. இது நீலா.” என்றனர். “அவங்க யாரு? யாரோ பூங்கோதை அவங்க தான் இந்த காட்டுக்குள்ள தொலைஞ்சு போனதா தகவல் வந்தது.” “ஆமா சார். ஆனா இவங்க […]

Amudham 47

அமுதம் 47 ஆதியின் மனதில் இருக்கும் கொதிப்பு அவன் காரை கையாண்ட விதத்திலேயே தெரிந்தது. வளைவுகளில் கூட ஆசாத்ய வேகம். அவனுடன் வந்த ராகுல் அவ்வப்போது அவன் தோளினை அழுத்தி அவனை நிலையாக இருக்கக் கூறினான். ஆதியால் இன்னும் நம்ப முடியவில்லை. ‘அந்த சக்தி எப்படி சென்னையில் இருந்து தப்பினான்? நீலா அத்தை எங்கிருந்து திடீரென்று முளைத்தார்? அவருக்கு தன் மேலும் தன் மனைவி மேலும் ஏன் இந்த வெறி?’ கார் வசந்த இல்ல வாசலில் நின்றதும், […]

Amudham 46

அமுதம் 46 ஆதிக்கு மனம் பரபரப்பாக இருந்தது. உடனே பூமாவைக் காண ஆவல் எழுந்தது. அது இயல்பாக கணவனுக்கு மனைவி மேல் வரும் காதலையும் தாண்டி, அவள் தனக்கு ஏதோ சர்ப்ரைஸ் என்று சஸ்பென்ஸ் வைத்தால் ஒரு உந்துதல் வர, மனைவியைக் காணும் ஆசையில் எஸ்டேட் பங்களா நோக்கி விரைந்தான். ஆனால் போகப் போக மனம் ஒரு வித சஞ்சலத்துக்கு ஆளானது. எஸ்டேட் வாயிலுக்கு கொஞ்ச தூரம் முன்னாலே ஏதோ ஒரு வண்டி கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக […]

Amudham 45

அமுதம் 45 அன்று காலையில் எழுந்தது முதலே கோதை சோர்வாக உணர்ந்தாள். ஆதி மீட்டிங் ஒன்றிற்கு கோவை சென்றிருந்தான். அவன் டீ பாக்டரிக்கு கோதை ஆள் அனுப்பினாள், ரிசார்ட்டில் உள்ள ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு அங்கிருந்து தினமும் டீத்தூள் அனுப்ப சொன்னதால், அவன் பிராண்ட் ரிசார்ட்டிற்கு வருவோருக்கு தெரிந்துபோனது, அதன் தரத்தால், அங்கேயே சின்ன விற்பனை நிலையம் ஆரம்பித்து வைத்தாள். ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்தாள் கோதை. அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க, ஆதியோ அவளை தலை மேல் […]

error: Content is protected !!