தமிழ் நாவல் உலகம்

For the love of books

Tamil Novel Ulagam Logo
சின்னஞ்சிறு கண்மலர்
 
Notifications
Clear all

சின்னஞ்சிறு கண்மலர்

 

Jeyalakshmi Karthik
(@jeyalakshmi-karthik)
Admin Admin
Joined: 6 months ago
Posts: 202
Topic starter  

படம்: பதிபக்தி

வெளியான வருடம்: 1958

படத்தில் பாடியவர்: பி. சுசீலா

பாடலை எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இசையமைத்தவர்கள்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் வரிகள்:

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

பாப்பா உன் அப்பாவை
பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில்
சாய்ந்தால்தான் துக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் வாழும் குண்டு மணி சரமே
குங்கும சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லூரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ

என் பார்வையில்:

குழந்தைக்கு பாடுற தாலாட்டு பாட்டுல கூட நாட்டு நடப்பை, பொருளாதாரத்தை அழகா சொல்லி இருப்பாங்க.

பிரணவ் குழந்தையா இருக்கும் போது அவனை தூங்க வைக்க நான் பாடும் பல பாடல்களில் இதுவும் ஒன்னு.

என் குரல்ல கேட்க தயாரா?

என் குரலில்:

https://www.youtube.com/shorts/wJVWAAOM7vw


தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️

-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------


   
Quote
Topic Tags
(@crvs27697)
Trusted Member Member
Joined: 6 months ago
Posts: 60
 

பாட்டு சூப்பர், அதுவும் நீங்க பாடியது... எந்தவொரு இசையும் இல்லாம, இன்னும் சூப்பர்.

பாட்டு கேட்குறதும், பாடறதும் கூட ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் தான்.

நானும் இப்படித்தான் கூடவே பாடுவேன், லிரிக்ஸை ரொம்ப ஆழ்ந்து போயிடுவேன்.

பட், பாட்டுல ஒரு சோகம் தெரியுதே அது ஏன்..? ஒருவேளை, சோகமான பாட்டு..?

 

😀😀😀

CRVS (or) CRVS 2797



   
ReplyQuote
Jeyalakshmi Karthik
(@jeyalakshmi-karthik)
Admin Admin
Joined: 6 months ago
Posts: 202
Topic starter  

@crvs27697 thank you. Athu sad song than.


தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️

-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------


   
ReplyQuote
Share:
தமிழ் நாவல்

தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.

error: Content is protected !!