For the love of books
கெவி
என் பார்வையில் - வலியோடு ஒரு பயணம்.
நடிகர்கள்: ஆதவன், ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின்
இயக்கம்: தமிழ் தயாளன்
வெள்ளக்கெவி இது கொடைக்கானல் மலைப்பகுதியில உள்ள ஒரு கிராமம். சாலைவசதி இல்லாத அந்த இடத்தைப் பத்தியும் அங்க மக்கள் எப்படி வந்தாங்கன்னு அந்த கிராமத்தோட வரலாறுல தொடங்குற கதை மெல்ல தான் பயணிக்குது. டோலி கட்டி தூக்கிட்டு போற முறை இன்னும் பயன்பாட்டுல இருக்குறது நம்ம அரசாங்கம் மக்களுக்கு அடிப்படை தேவைகளைக் கூட முழுமையா பூர்த்தி செய்யலன்னு பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லுது.
இருள், டார்ச் லைட் வெளிச்சம்னு படத்தோட தேவைக்கு அதை சரியா பயன்படுத்தி இருக்கற ஒளிப்பதிவு அருமை. அளவான பின்னணி இசையோட மாலையின் அழகையும் ஆபத்தையும் காட்டி இருக்கும் படத்தொகுப்பு படத்துக்கு பிளஸ்.
அதிகாரம் கையில இருந்தா மக்கள் அதை தலையில ஏத்திக்கிட்டு என்னென்ன செய்வாங்கன்னு போலீஸ் அதிகாரிகளா, டாக்டரா வர்ற கதாப்பாத்திரங்கள் மூலமா அருமையா வெளிப்படுத்தி இருக்கார் இயக்குநர்.
அதிகாரத்துக்கு கட்டுப்பட்டுப் பழகிய மக்கள் சக மனிதனோட வலியை புரிஞ்சுகிட்டு ஒரு கட்டத்துக்கு மேல தன்னோட மேலதிகாரியை அவங்களால முடிஞ்ச வரைக்கும் எதிர்க்கும் இடங்கள் மனசுக்கு நிம்மதியும் மனிதம் சாகல என்ற நம்பிக்கையையும் கொடுக்குது.
சாலை வராத ஒரு ஊருக்கு ஓட்டுப் பெட்டி மட்டும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து போகுதுன்னு சொன்ன இடத்தை நம்மால மறுக்கவே முடியல.
கதையில கதாநாயகன் நாயகின்னு பிரிச்சு சொல்ல முடியாத அளவுக்கு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. ஷீலா ராஜ்குமார் ஒரு பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணா திறம்பட நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க. அவங்களுக்கு தம்பியா வர்ற பையனோட தவிப்பு நமக்கும் அவனோட அக்கா பிழைக்கணும் அப்படிங்கற தவிப்பை கடத்துது.
நிலச்சரிவுல அடிபட்டவங்களை டோலி கட்டி தூக்கிட்டு ஓடும்போதும் சரி, கர்ப்பிணி பெண்ணை தூக்கிட்டு ஓடும்போதும் சரி அதோட அவசரம், தேவையை விளக்கும்படியான நடிப்பை அங்கிருந்தவர்கள் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
தன் மனைவிக்கு வளைகாப்பு செய்ய ஆசையா பொருள் வாங்கிட்டு வர்ற மலையன் ஏற்கனவே பிரச்சினை பண்ணின அதிகாரிகள் கிட்ட மாட்டி அடி வாங்கும் இடத்தில் 'எளியோரை வலியோர் அடித்தால் வலியோரை தெய்வம் அடிக்கும்' னு படிச்சதெல்லாம் சும்மாவா டா என்ற எண்ணம் தான் வருது.
தன்னை அடிக்கும்போது தடுத்து தப்பிச்சவன் தன் மனைவியை அவங்க தப்பா பேசும்போது கோபப்பட்டு அடிப்பது பார்க்கற நமக்கு அவனோட மன உணர்வுகளை அற்புதமா கடத்தி அதை ஏற்க வைத்தாலும் அவங்க அடிச்ச அடிக்கு அவன் தப்பிச்சதா காட்டியதே பெருசு, இதுல அவங்களை அடிக்கிறது கொஞ்சம் அதிகமாகவும், நம்ப முடியாத உடல் வலிமையாவும் தோனுது. ஆரம்பத்தில் அவங்க அடியை கொஞ்சம் குறைத்து காட்டி இருந்தா இப்படி தோனி இருக்காது. இது ஒரு இடம் தான் படத்தில் கொஞ்சம் நெருடல்.
ஜூனியர் டாக்டரா வரும் ஜாக்குலின் பெர்ஃபார்ம் பண்ற அளவுக்கு காட்சிகள் இல்ல. ஆயாவா வந்த ஜீவா சுப்ரமணியத்துக்கு இருந்த முக்கியத்துவம் கூட ஜாக்குலினுக்கு இல்லாதது வருத்தம் தான்.
கடைசில ஹீரோயிசம் காட்டி ஊரை மாற்றியது போல எடுக்காம, இதான் எதார்த்தம், இப்படி தான் இருக்கு. இனிமேலும் இப்படி தான் இருக்கும் அப்படின்னு முடிச்ச இடம் மனசுல கனத்தை கொடுக்குது.
பஸ் வசதி இல்லாத நிறைய கிராமங்களை நானும் திண்டுக்கல்ல பார்த்திருக்கேன். சில ஊருக்கு பிரைவேட் மினி பஸ் குறிப்பிட்ட நேரம் மட்டும் வரும். அதுவும் ஊர் பொது ரோடு இல்ல ஊர் எல்லையில் மெயின் ரோட்டிலோ வரும். ஆனா இங்க சாலையே இல்ல.
சாலை வசதி இருந்தா கூட மக்கள் தங்களோட சொந்த வாகனத்துல அவசரத்துக்கு வந்து போவாங்க. மலையில் அதெல்லாம் சாத்தியமில்லைனு சொல்றதெல்லாம் சப்பைக்கட்டு. கொடைக்கானல், ஊட்டி, இப்படி மெயின் இடங்களுக்கு சாலை போட முடிஞ்ச அரசால சிறு கிராமங்களுக்கு அடிப்படை மண் சாலை கூட போட்டுத் தர முடியாதது அவங்க அலட்சியத்தை தான் காட்டுது.
அழுத்தமான கதை, நல்ல கதாப்பாத்திரங்கள், நல்ல நடிப்பு. பார்க்க நல்ல படம். மனம் தான் கனத்துப் போகும்.
படம் சன் நெக்ஸ்ட் ஆப் ல ஸ்ட்ரீம் ஆகி இருக்கு.
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.
