“Without love, there is no relationship. Without respect, there’s no reason to stay in it.” அமுதம் 20 அந்த பெரிய வீட்டின் அமைதியே அந்த வீட்டினரின் மனநிலையை பிரதிபலித்தது. சுந்தரை கதிர் சாப்பிட வைக்க போராடிக்கொண்டிருந்தார். சுந்தர் சோபாவை விட்டு நகரவே இல்லை. முகம் இறுகி அமர்ந்தவர் தேவைக்கு எழுந்து சென்றுவிட்டு மீண்டும் அங்கேயே இருந்துகொண்டார் இரண்டு நாட்களாய். லட்சுமி அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. தமயந்திக்கு தன் இளைய […]
“To be trusted is a greater compliment than being loved.” அமுதம் 19 தன்னருகில் அமர்ந்து ஊட்டியின் எழிலை ரசிக்கும் எழிலாளை ரசித்தவண்ணம் வந்தான் ஆதி. அவன் சொன்ன இடத்திற்குக் காரை செலுத்திக்கொண்டிருந்த ஓட்டுநரின் கண்கள் அவ்வப்போது ஆதியைத் தொட்டு மீண்டது. அவரோ, தான் செல்லும் வழியை கவனித்து தவறினால் திருத்துவான் என்று பார்த்தால் அவனோ தன் மனைவியை காதலாகக் கண்டுகொண்டிருந்தான். ‘சரிதான்’ என்று அவர் சாலையில் கவனமானார். கோதை திரும்பிப் பார்த்தபோது ஆதியின் […]
Jeyalakshmi Karthik Novels “Respect is the foundation of a stable way of life and the basis of a code of conduct.” அமுதம் 18 எங்கோ சலங்கையை உலுக்கியது போல சிரிப்பொலி கேட்க, மெதுவாய் கண் திறந்து பார்த்தான் ஆதி. விடிந்து விட்டது. ஆனால் அவனருகில் மணவாட்டியைக் காணவில்லை.. சிரிப்பொலி தொடர்ந்து கேட்கவே முதல்நாளின் தாக்கம் ஏதும் இல்லாமல் புன்னகைக்கும் தன் பூவானவளின் குரலில் ஆதி பூரித்துப்போனான். தன் காலைக்கடன்களை […]
“As long as you’re alive, you always have the chance to start again.” அமுதம் 17 தன் தோள் சாய்ந்து சிறுபிள்ளை போல் உறங்கும் தன் மனைவியைக் கண்ட ஆதியின் உள்ளம் பூரித்தது. அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிகிறதா என்று அவனும் தேடினான். ஆனால் அதுவோ சொர்க்கமே கிடைத்துவிட்ட திருப்தியைப் பிரதிபலித்தது. அவன் அவளை அவள் வீட்டிலிருந்து அழைத்து வந்ததும் கால் டாக்ஸி வரவைத்து ஊட்டிக்குக் கிளம்பிவிட்டான். வண்டி ஏறிய சில […]
“The way they leave tells you everything.” அமுதம் 16 ஆரம்பத்தில் முகிலனை கோதை யாரோ என்று நினைத்தது அவனை பெரிதாக பாதிக்கவில்லை. ஆதியை அத்தான் என்று கோதை அழைத்ததும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அதன் பின் அவள் தன்னை, தன் தோற்றத்தை வர்ணித்த விதம் அவனை எரிச்சலடையச் செய்தது.. இருந்தும் அவளுக்கு நம் தோற்றம் பிடிக்கவில்லை. ‘பட்டிக்காடு’ அவள் என்றே அவள் பேச்சுக்களை ஒதுக்கிவிட்டான். ஆனால் தெருவின் வாண்டுகளும் அதே சொல்ல […]
Jeyalakshmi Karthik’s Classic அமுதம் 15 எதிர்பாராமல் நடந்த கோதையின் திருமணமும், அதிரடியாய் அவள் வெளியேறியதையும், தங்கள் தந்தையே அவர்களுக்காக நின்றதும், பெரியவர்களை பெரிதும் பாதித்தது. ஆதியின் பேச்சு, அவன் கோதையை அழைத்துச்சென்ற விதம் என்று இன்னும் பல குழப்பங்கள். அவரவர் ஒரு இடத்தில் அமர்ந்து கைத்தாங்கலாய், தலை சாய்த்து என்று ஆளுக்கொரு யோசனையில் இருக்க, புயல் போல வீட்டினுள் நுழைந்தான் அகிலன். “அம்மா, அப்பா! என்ன இதெல்லாம்? வீடெல்லாம் அலங்காரமா இருக்கு. என்ன விஷேக்ஷம்? என்கிட்ட […]
“Family betrayal may steal your innocence, but it gifts you wisdom in return.” அமுதம் 14 தன் வீட்டின் அலங்காரத்திலும் தாயின் அணுகுமுறையிலுமே துவண்டிருந்த கோதையிடம் ,அவளுக்கு திருமணம் என்று எப்படி சொல்வது என்று நொந்துபோனாள் சுபா. ஆனாலும் சொல்லித்தான் தீர வேண்டும்.. அனைவரும் கோதையை சமாதானம் செய்துகொண்டிருக்க, சுபா பொதுவாய், “இங்க என்ன விஷேசம்ன்னு கேட்டுட்டேன்”, என்றாள். “சொல்லு டீ என்னவாம் “, என்று கிருத்தி கேட்க.. கண்களில் வழியும் நீருடன்,” […]
“You never see the knife coming when it’s veiled by the warmth of family.” அமுதம் 13 ஆதிக்கு அன்று பேக்டரியில் நிறைய குழப்பங்கள். அவனும் இந்த ஒரு ஆண்டாக எல்லாம் பார்த்து பார்த்து தான் செய்கிறான். இருந்தும் தொழிலாளர்கள் சிலர் செய்யும் செயல்கள் அவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏற்கனவே கோவைக்கும் நீலகிரிக்கும் அலைந்து கொண்டிருப்பவன். இன்று தொழிலாளர் இருவர் போட்ட சண்டையில் சமாதானம் செய்யவே இரவாகிப் போனது. இதற்குமேல் கோவை […]
“Children make you want to start life over.” அமுதம் 12 மாற்றங்கள் பெரிதும் இல்லாமல் கோதையின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அன்று காலை தோட்டத்தில் அருணா பதற்றமாக இருக்க அவளை இடித்துக்கொண்டு அமர்ந்த கோதையை அவள் புன்னகையுடன் வரவேற்றாள். “கோதை எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?” “என்ன அரு செல்லம் இப்படி கேட்டுட்டீங்க? உங்களுக்கு இல்லாததா… “ “உன்னோட வண்டி வேணும் கொஞ்சம் தருவாயா? பிளீஸ்” தினமும் மாமியாருடன் சென்று அவருடனே திரும்புவதால், இத்தனை நாட்களில் […]
Love is not what you say, Love is what you do! Amudham 11 – அமுதம் 11 ராகுலைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற ஆதியும், கோதையும் ஆச்சரியம் அடைந்தனர். அங்கே அகிலன், வெண்மதி, ஷியாம் மூவரும் இருந்தனர். கோதை ராகுலுக்கு அருகில் சென்று அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “ஏன் ராகுல், நீ கொஞ்சம் விலகிருந்தா அவன் உன்னை அடிச்சிருக்க மாட்டானே!” “ஏன் கோதை என்னை இப்படி ஒருத்தன் தலைமுடியை பிடிச்சு இழுத்துட்டு போனா […]
