Adhigara 15

அதிகாரம் 15 என். என். குளோபல் தங்க எழுத்துக்களில் மின்னியது அந்த பெயர் பலகை. இரவில் விளக்கொளியில் மின்ன தேவையான விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது பகலில் தெரியாத வண்ணம் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. நான்கு மாடிக் கட்டிடம் கண்ணாடியில் இழைத்தது போல வெயிலில் பட்டு பல வண்ணங்களை சிதற விட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய லேண்ட்ரோவர் காரிலிருந்து பட்டுச் சேலை சரசக்க இறங்கி வந்தாள் அஞ்சனா. தம்பியின் அலுவலக கட்டிடம் கண்டு குளிர் கண்ணாடியைக் கழற்றி ஏறிட்டாள். காலையில் கட்சி அலுவலகம் […]

Adhigara 14

அதிகாரம் 14 தனக்காக புதிய அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருந்தான் நீரூபன். எல்லாவற்றையும் பண்ணையில் அமர்ந்து செய்ய முடியாத காரணத்தினாலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் தந்தைக்கு ஆதரவாக ஏதாவது செய்ய கண்டிப்பாக நகரத்திற்குள் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன் இதனைப் பற்றி நிறையவே யோசித்து இந்த முடிவை எடுத்திருந்தான். ஏற்கனவே இருந்த கட்டிடத்தை கம்பெனி பெயரில் வாங்கி புணரமைத்து தேவையான ஏற்பாடுகள் எல்லாமே மணீஷ் மூலம் செய்து விட்டான். ஆனால் இங்கே வராமல் பண்ணையில் இருந்தே அனைத்தையும் கவனித்துக் […]

Adhigara 13

அதிகாரம் 13 நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த தோழியை முறைத்துக் கொண்டிருந்தான் ஆனந்த். அவனை வரவழைத்து அமர வைத்து அவள் வேடிக்கை காட்டுவது என்னவோ மாறி மாறி தெரியும் அவளது முகபாவங்களைத் தான். பொறுமையிழந்த ஆனந்த், “நான் கிளம்பவா?” என்று வண்டி சாவியை எடுத்தான். “மச்சி சும்மா இரு. நானே டென்ஷன்ல இருக்கேன்” என்று சிணுங்கிய தோழியை தயவுதாட்சண்யம் பார்க்காமல் பின் தலையில் பட்டென்று ஒரு அடி அடித்தான். “அவ்ளோ தான் உனக்கு சொல்லிட்டேன். நான் வேலை இல்லாதவன் […]

Adhigara 12

அதிகாரம் 12 நீரூபன் தன் அலுவல் அறையில் அமர்ந்திருந்தான். அவனது சிந்தனை முழுவதும் முதல் நாள் அவனது கட்டளையின் பெயரில் பள்ளியைப் பற்றி விசாரித்து கொடுக்கப்பட்ட அறிக்கையின் மீது இருந்தது. அந்த பள்ளியை வாங்கும் முன்னரே அதற்கான ஆயத்த வேலைகளை முடித்திருந்ததால் துவக்கப் பணிகளில் கவனம் செலுத்தி இருந்தவனுக்கு தினமும் ஏதோ ஒரு விதத்தில் இடைஞ்சல் வந்த வண்ணம் இருந்தது. ஆரம்பத்தில் அது எதார்த்தம் என்று நினைத்த நீரூபன், கட்டிட வேலைக்கு வந்தவர்கள் தங்க ஏற்படுத்தப்பட்ட ஷெட்களில் […]

Adhigara 11

அதிகாரம் 11 தன்னிடம் பேச வந்துவிட்டு தன் மடிக்கணினியில் கவனமாக இருந்த நேத்ராவை முறைத்துக் கொண்டிருந்தான் வசீகரன். அவளோ அண்ணன் தன்னிடம் கொடுத்த வேலைக்காக கருமமே கண்ணாக ஆயத்தப் பணிகளில் மூழ்கி இருந்தாள். வாங்கி வைத்திருந்த மோஜிடோ தன் குளிர்ச்சியை இழந்திருந்தது போல வசீகரனும் பொறுமை இழந்து போயிருந்தான். “ஏய் ஐஸ்.. நான் கிளம்புறேன் நீ உன் லேப்டாப் கூடவே ஜாலியா இரு” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான். “வசீ.. பிளீஸ் உட்காரு டா. டூ மினிட்ஸ்ல […]

Adhigara 10

அதிகாரம் 10 இரவில் தன் படுக்கையில் படுத்திருந்த நீரூபனின் மனதில் பல எண்ணங்களின் ஓட்டம். அவன் எண்ணமெல்லாம் புதிய பள்ளியின் திறப்புக்கு முன் செய்ய வேண்டிய ஆயத்தப் பணிகளைப் பற்றியே இருந்தது. நேத்ராவிடம் வலைதள வடிவமைப்பை கொடுத்துவிட்டான். இனி பள்ளிக்கு கட்டிட மறுசீரமைப்பு, ஆசிரியர் தேர்வு, தவிர வேறு என்னவென்று மனதில் கணக்கிட்டான். அப்படியே உறங்கிப்போனான். அவன் உறங்கிய பின் அவனறைக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்த அஞ்சனா அவன் தூங்குவதைக் கண்டாள். அருகே சென்று […]

Adhigara 9

அதிகாரம் 9 ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்த நீரூபன் மனதில் வந்து போனாள் பூமிகா. அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அவளது காது குத்தும் நிகழ்வில் தான். சிறு குழந்தையாக வெண்ணெய் கட்டி போல இருந்தவள் தலையில் முடி இல்லாது மொட்டை அடித்திருக்க, சந்தனம் பூசப்பட்ட அதனை அவ்வப்போது தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தாள். தலைமுடிக்கே அழும் இவள் காதில் ஓட்டை போடும்போது என்ன செய்வாளோ என்று பார்த்திருந்த நீரூபனுக்கு வயது ஒன்பது. நேத்ராவுக்கும் பூமிகாவுக்கும் சில […]

Adhigara 8

அதிகாரம் 8 மதிய நேரத்தில் வீட்டில் உணவு உண்ணுவது என்பது ஒரு அலாதி சுகம். அதிலும் தாயின் கையால் பரிமாறப்படும் சூடான உணவு கண்டிப்பாக சுவையில் பஞ்சமே இருக்காது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நீரூபன் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து விடுவான். அதில் கூடுதல் வசதி என்னவென்றால் அவன் மனம் போல நாகரத்தினத்திடம் உரையாட முடியும். யாரும் குறுக்கே பேசி தடுப்பதோ, தொலைவில் நின்று முறைப்பதோ இன்றி இருவரும் மனம் விட்டுக் கேலியாக பேசி நேரம் செலவு […]

Adhigara 7

அதிகாரம் 7 கல்வி அலுவலர் முன் அமர்ந்திருந்த நீரூபனின் முகத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை. அவன் எதிர்க்கட்சித் தலைவர் மகன் என்று தெரிந்ததும் அந்த அலுவலர் செய்த செயலில் கடும் கோபத்தில் இருந்தவன் நேராக இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கல்வி அமைச்சர்களுக்கு போன் செய்து பேசிவிட அவர் அலுவலரிடம் என்ன பேசினாரோ இங்கே அவர் நீரூபன் முன் பணிவாக வந்து தன் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தார். “சார் சாரி. வேணும்ன்னு உங்களை காக்க வைக்கல” என்று கல்வி […]

Adhigara 6

அதிகாரம் 6 அஞ்சனாவின் தலையீட்டால் மிகவும் கோபத்தில் இருந்தார் கோதண்டம். திருமூர்த்திக்கு அடுத்த நிலையில் கட்சியில் முக்கியமான ஆட்கள் நான்கு பேர். கோதண்டம், சேலம் சேகர் ராஜா, மலைச்சாமி, ஆலந்தூர் ஆறுமுகம். திருமூர்த்தி இவர்கள் நால்வரையும் நல்ல மரியாதையுடன் நடத்துவார். திருமூர்த்தி ஆட்சியில் இருந்த காலத்தில் பொதுப்பணித்துறை, தகவல்தொடர்பு, நிதி அமைச்சகம், வேளாண்துறை, கல்வித்துறை, மின்சாரம் என்று முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் இவர்களிடம் தான் இருக்கும். சுற்றுப்பயணம் செல்லும் போது அவசர முடிவுகளை இவர்களே கூடி எடுக்கும் […]

error: Content is protected !!